பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இலக்கண விதி: குறில் ஒன்றனையும் சாராது, ஒருமொழி தொடர் மொழிகளைச் சார்ந்த னகர, னகர ஈறுகள்,வருமொழிக்கு முதலாக வந்த நகரம் மயக்கவிதி இன்மையினுலே திரிந்தவிடத்துத் தாம் கெடுதலைப் பொருந்தும். குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே (ந-நூற்பா 210.) 2. யகர, ரகர, ழகர ஈற்றுப்புணர்ச்சி (எழுவாய்த்தொடர்-இயல்பு) வேய் + குறிது=வேய்குறிது வேர் - சிறிது=வேர்சிறிது யாழ்-பெரிது=யாழ்.பெரிது இவ்வாறு, அல்வழி எழுவாய்த் தொடரில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் இயல்பாகும். (உம்மைத்தொகை-இயல்பு) பேய்+பூதம்=பேய்பூதம் நீர் - கானல்=நீர்கானல் இகழ் + புகழ்=இகழ்புகழ் இவ்வாறு, அல்வழி உம்மைத் தொகையில் யகர, ரகர, ழகர மெய்களின் முன் வரும் க, ச, த, பக்கள் இயல்பாகும். (வினைத்தொகை-இயல்பு) செய்-கடன்=செய்கடன் தேர்-பொருள்=தேர்பொருள்