பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



4

க், ச், ட், த், ப், ற் என்ற வல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும், மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும்.

ங், ஞ், ண், ந், ம், ன் என்ற மெல்லின மெய்யெழுத்துக்கள் ஆறும், முக்கை இடமாகக் கொண்டு பிறக்கும்.

ய், ர், ல், வ், ள், ழ் என்ற இடையின மெய்யெழுத்துக்கள் ஆறும், கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும்.

இலக்கண விதி: உயிர் எழுத்துக்களுக்கும் இடையின மெய் எழுத்துக்களுக்கும் பிறப்பிடம் கழுத்தாகும். வல்லின மெய் எழுத்துக்களுக்குப் பிறப்பிடம் மார்பாகும். மெல்லின மெய் எழுத்துக் களுக்குப் பிறப்பிடம் முக்காகும்.


அவ்வழி,-
ஆவி யிடைமை யிடமிட றாகும்
 மேவு மென்மை மூக் குரம்பெறும் வன்மை.

(ந-நூற்பா 75.)

3. உயிரெழுத்துக்களின் முயற்சிப் பிறப்பு
(அ, ஆ, இவற்றின் முயற்சிப் பிறப்பு)

அரசன் - ஆண்டி

இச் சொற்களில் உள்ள அ-ஆ என்ற உயிரெழுத்து க்களை ஒலித்துப் பாருங்கள். இவற்றை ஒலிப்பதற்கு வாய் திறத்தலாகிய முயற்சி மட்டும் போதும் என்பது தெரியவரும்.

இலக்கண விதி: அ-ஆ என்ற உயிரெழுத்துக்கள் இரண்டும், முன்பு கூறப்பட்ட நால்வகை