பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 9. பாடாண்டிணை: (பாடு + ஆண் + திணை) பாடப்படுகின்ற ஆண் மகனது ஒழுக்கம் எனப் பொருள்தரும். அஃதாவது, பாடப்படுகின்ற ஆண்மகனது வீரம், வெற்றி, இரக்கம், ஈகை, புகழ் ஆகியவற்றைச் சிறப்பித்துப்பாடுவதாகும். 10. பொதுவியல்: மேலே கூறியுள்ள புறத் திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளைக் கூறுவது. 11. கைக்கிளே ஒருதலைக் காமம். அ.தாவது ஆண் பெண் ஆகிய இருவருள், ஒருவரிடத்தில் மட்டும் தோன்றும் அன்பு பற்றியது. 12. பெருந்திணை: பொருந்தாக் காமம். ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிடத்துத் தோன் றும் அன்பு பற்றியது. வெட்சித்தினேயும், கரந்தைத்தினையும் ஒன் றற்கொன்று மறுதலைத் திணையாகும். வஞ்சித்தினையும், காஞ்சித்தினையும் ஒன்றற் கொன்று மறுதலைத் திணையாகும். கொச்சித்தினையும் உழிஞைத்திணையும் ஒன் றற்கொன்று மறுதலைத் திணையாகும். பயிற்சி விளுக்கள் 1. அகத்திணையாவது யாது? அஃது எத்தனை வகைப் படும்? அவை யாவை? 2. ஐந்திணைகளுக்குரிய பொருள்கள் எவை? 3. முதற் பொருள்கள் எவை? 4. நிலம் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ?