பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 வரும். இது நேரிசை வெண்பாவின் இலக்கண மாகும். (இன்னிசை வெண்பா) வெண்பாவின் பொது இலக்கணம் எல்லாம் அமையப்பெற்று, கேரிசை வெண்பாவில் சிறிது வேறுபட்டு நான்கடியாய் வருவது, இன்னிசை வெண்பா எனப்படும். அவை, தனிச் சொல் இன்றி ஒரு விகற்பமாய் வருதலும், தனிச் சொல் இன்றிப் பல விகற்ப மாய் வருதலும், அடி தோறும் தனிச் சொல் பெற்று வருதலும், இரண்டாம் அடியின் இறுதிச் சீர் தனிச் சொல்லாய் முன்று விகற்பமாய் வருத லும், முன்றம் அடியின் இறுதிச் சீர் தனிச் சொல் லாய் இரு விகற்பமாயும், பல விகற்பமாயும் வரு தலும் எனப் பல வகைப்படும். கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேங்கால் துயராண் டுழவார் வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்காற் பரிவ திலர்.' இது, தனிச் சொல் இன்றி நான்கடியும் ஒரு விகற்பமாய் வந்த இன்னிசை வெண்பாவாகும்.

கடற்குட்டம் போழ்வர் கலவர் பகைக்குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோமில் தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும் அவைக்

(குட்டம் கற்ருன் கடந்து விடும்.' இது, தனிச் சொல் இன்றிப் பல விகற்பமாய் வந்த இன்னிசை வெண்பாவாகும்.