பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அணி 1. வேற்றுப்பொருள் வைப்பணி அ.தாவது, புலவர் தாம் கூறக் கருதிய பொருளை முன்பு கூறி, அதனை வலியுறுத்துவ தற்கு உலகறிந்த வேறு ஒரு பொருளைப் பின்பு எடுத்துக்காட்டிக் கூறுவது, வேற்றுப்பொருள் வைப்பணி எனப்படும். 'புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச் சிறந்த வொளிவளர்க்குந் தேரோன்-மறைந்தான் புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி இறவாது வாழ்கின் ருர் யார்.' 'இருள் புறங்காட்டி ஒடும்படி அழகிய சக்க ரத்தைச் செலுத்திச் சிறந்த ஒளியை வளர்க்கும் தேரை உடைய சூரியன் மறைந்தான்; புறத்தே கட லால் சூழப்பட்ட இவ்வுலகிலே தோன்றி இறவா மல் வாழ்கின்ருர் யார்? ஒருவருமில்லை’ என்பது இப்பாடலின் பொருளாகும். இப்பாடலில் முன் இரண்டடியில் கூறப்பட்ட ‘சூரியன் மறைந்தான்’ என்ற சிறப்புப் பொருள், 'உலகத்தில் தோன்றிய யாவரும் இறப்பது உறுதி என்று, பின் இரண்டடியில் கூறப் பட்ட பொதுப் பொருளால் வலியுறுத்தப்படு கிறது. எனவே, இது வேற்றுப்பொருள் வைப்பணி ஆகும்.