பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 மிடற்றினை உடையார்’ என்பது இப்பாடலின் பொருள். இப்பாடலில் கொடியார் கொடியார்','உரியார் உரியார்’, ‘கரியார் கரியார்’ என்ற சொற்கள் மீண் டும் மீண்டும் வந்து வேறு பொருள் தருகின்றன. எனவே, இப்பாடல் மடக்கணி எனப்படும். 5. வஞ்சப் புகழ்ச்சி ஒன்றனேப் புகழ்ந்தாற் போலப் பழித்துரைத் தலும், பழித்தாற்போலப் புகழ்ந்துரைத்தலும் வஞ்சப் புகழ்ச்சி எனப்படும். இவ் வஞ்சப் புகழ்ச்சி அணி, இலேச அணியின் பாற்படும். 'இவ்வே பிலியணிந்து மாலை சூட்டிக் கண்டிரள் நோன் காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ'............ என்ற இப் பாடற் பகுதி, வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு எடுத்துக்காட்டாகும். இப்பாடல், அஞ் சியின் பொருட்டுத் தொண்டைமானிடம் துாது சென்ற ஒளவையார் பாடியதாகும். தொண்டைமானின் படைக்கலங்களைக் கண்ட ஒளவையார், இப் படைக்கலங்கள் மயிற்பீலி அணிந்து மாலை சூட்டப்பெற்றுக் காம்பு திருத்தி கெய் பூசப் பெற்றுப் புதிதாக உள்ளன என்று புகழ்வது போலக் கூறிக் குறிப்பாக இப் படைக் கலங்கள் போரிற் பயன்படுத்தப்படவில்லை.