பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 3. சொற்பொருட்பின்வருநிலையணி 'வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாழ்நாண் மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார்.' இப் பாடலில், வைகல் என்ற முன் வந்த சொல்லே, பின்னும் பலவிடத்தும் வந்து நாள் தோறும் என்னும் ஒரே பொருளைத் தந்தமையின் இது சொற்பொருட்பின்வருநிலையணியாகும். பயிற்சி விளுக்கள் வேற்றுப்பொருள் வைப்பணியாவது யாது? சான்று தருக. வேற்றுமையணியை ஒர் எடுத்துக்காட்டின் வாயி லாக விளக்குக. இரட்டுற மொழிதலின் இலக்கணத்தையும், அதன் மறுபெயரையும் கூறுக. பிரிமொழிச் சிலேடை அணிக்கோர் சான்று தருக. மடக்கணியாவது யாது? ஒர் எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்குக. வஞ்சப் புகழ்ச்சி அணியின் இலக்கணத்தைக் கூறுக. பின்வரும் பாடலில் உள்ள அணியைக்கூறி விளக்குக. தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்." சொற்பொருட்பின்வருநிலையணி எத்தனை வகை யாக வரும் ? அவை யாவை? ஏதேனும் ஒன் றிற்கு எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக.