பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 கிலாடுக்கம் போன்றவற்றையும்,எதிர்பாராமல் நிகழும் இ ைட யூ று க ளா ன கலம் கட்லில் முழ்குதல், வானவூர்தி விண்ணில் எரிந்து வீழ்தல் போன்றவற்றை யும் எடுத்தியம்பும் கட்டுரையில் இடம் பெறச் செய்ய லாம். தரைச் செலவு, கடற்செலவு பற்றி உண்மையில் தாம் அனுபவித்தவைகளைப் பற்றியும் அல்லது கற் பனேயில் தாம் கண்டவற்றைப் பற்றியும் விளக்கி வரையலாம். இவ்வாறு மேற்குறித்த பொருள்கள் பற்றிக் கட் டுரைகள் எழுதும்போழ்து, நிகழ்ச்சிகளைத் தொடர்ச்சி யாகக் கொண்டு செல்லவேண்டும். வேண்டாத செய்திகளை விலக்கிவிடலாம். பெரியோர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வரையும்போழ்து, அவர்களின் பண்பாடு பகளையும், பழக்க வழக்கங்களையும் குறிப்பிடல் வேண்டும். எடுத்தியம்பும் கட்டுரையைப் படிக்கும் பொழுது, கட்டுரையில் உள்ளன யாவும் தம்முன் நிகழ்வதுபோல் காட்சியளித்தல் வேண்டும். இவை யாவையும் கினேவிற்கொண்டு, தொடரும் பத்தியி லுள்ள பொருள்கள் குறித்துக் கட்டுரைகள் வரைந்து பயிற்சி பெறுக. (1) நீ விரும்பிக் கேட்ட கதை (2) நீ கூற விரும் பும் கதை (3)ரீ விரும்பும் பெரியார் ஒருவரின் வரலாறு (4) நீ மகிழ்ந்த சில நிகழ்ச்சிகள் (5) நீ பார்த்த திருவிழா (6) ஒர் அறிஞருடன் உனக்கு ஏற்பட்ட முதற் சந்திப்பு (7) கீ கண்ட ஒரு தெருத் துன்ப கேர்ச்சி (8) நீ கேரில் கண்ட இயற்கையின் எழுச்சி (9) நீ சிறுவயதில் செய்த அஞ்சாச் செயல் (10) நீ செய்த கடற் செலவு (11) உனக்குப் பிடித்த பள்ளி