பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 இலக்கணக் குறிப்புக்கள் _ - இங்கே முதற்சீரிலும் மூன்றஞ் சீரிலும் உள்ள முதலெழுத் துக்கள் ஒத்துவரத் தொடுக்கப்பட்டுள்ளமையால் மோனைத் தொடையாம். செய்யுள் நலம் பாராட்டுதல் செய்யுள் நலம் பாராட்டுதலில் மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய குறிப்புகள் :- முதலில் கொடுக்கப்பட்ட பாடல்களை நன்கு படித்துணர வேண்டும். பிறகு சந்தர்ப்பங் கூறித் திரண்ட கருத்தை எழுதவேண்டும். அதன் பிறகு அச் செய்யுளில் உள்ள பொருளாழமுள்ள சொற்களை எடுத்து அவற்றில் அமைந்து கிடக்கும் நயங்களை எடுத்துக் காட்ட வேண்டும். இவ்வுரை நூலில் செய்யுட் பகுதியில் சொல் நயங் கள் காட்டப்ப்ட்டுள்ளதைக் கண்டுகொள்க. பிறகு பொருளிற் காணுஞ் சிறப்புக்களை எடுத்துக்காட்ட வேண்டும். அணிகள் அமைந்திருப்பின் எடுத்தெழுதவேண்டும். எதுகை மோனைகளை யும் எடுத்துக் காட்ட வேண்டும். பாடல்களில் மெய்பாடுகள் இருப்பின் அவற்றையும் சுட்டிக்காட்ட வேண்டும்.