பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே...
எனக்குப்பிறகு கவிஞன் ..... முடியரசன் .....

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார்.

-முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்

சாதி ஒழிய வேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள், அவற்றைத்தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவிஞர் முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை .

-தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வேத்தவைப் பாவலரும் வேற்று மொழிகலக்குந்
தீத்திறக் காலை தெளி மருந்தே - மூத்த
முடியரச ரின்றி மொழிவனப்புச் செய்யும்
முடியரசன் செய்யுண் முறை.

- மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

பாடப் பிறந்த பழஞ்சபை மாணவன்
மூடப் பழக்கஞ் சாடிய பாவலன்....
இலக்கியம் நிலமா இலக்கணம் அரணாக்
கவிதை கோலாக் கற்பனை கொடியா
வெல்க தமிழெனும் விறற்கொடி பொறியா
யாப்புப் படையா நல்லணி துணையாப்
புரட்சி முரசாப் புதுமை துடியாத்
தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையா
அல்மொழி திணிப்பார் வல்வர வெதிர்த்துத்
தொடுமொழிப் போரில் தும்பை சூடியோன்
மொழியர சோச்சும் முதல்முடி யரசன்
குடியரசு போற்றுங் கொள்கை யோனே

-முனைவர் வ.சுப.மாணிக்கனார்