பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


தேடிவந்த சிறப்புகள்
(விருது.பட்டம், பரிசு.-வழங்கியவர். இடம்-ஆண்டு)

❖ 'அழகின் சிரிப்பு' என்ற கவிதைக்கு முதல் பரிசு-பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ் மாநாடு, கோவை-1950

❖ ‘திராவிட நாட்டின் வானம்பாடி' பட்டம்-பேரறிஞர் அண்ணா -1957

❖ ‘கவியரசு' பட்டம், ‘பொற்பதக்கம்'-குன்றக்குடி அடிகளார், பாரி விழா, பறம்புமலை -1966

❖ ‘முடியரசன் கவிதைகள்' நூலுக்குப் பரிசு - தமிழ்நாடு அரசு - 1966

❖ 'வீரகாவியம்' நூலுக்குப் பரிசு-தமிழ்நாடு அரசு-1973

❖ 'நல்லாசிரியர் விருது' பதக்கம்-கே.கே.சா, ஆளுநர், தமிழ்நாடு அரசு - 1974

❖ ‘சங்கப் புலவர்' பட்டம் - குன்றக்குடி அடிகளார் - 1974

❖ ‘பாவரசர்' பட்டம், 'பொற்பேழை' - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், உலகத் தமிழ்க் கழகம், பெங்களூர்-1979

❖ ‘பொற்கிழி’-பாவாணர் தமிழ்க் குடும்பம். நெய்வேலி-1979

❖ 'பொற்குவை'-ரூ10,000-'மணிவிழா' எடுப்பு-கவிஞரின் மாணாக்கர்கள், காரைக்குடி-1979

❖ 'பொற்கிழி'-பாரதியார் நூற்றாண்டு விழாக் குழு. சிவகங்கை

❖ 'கவிப்பேரரசர்' பட்டம் ‘பொற்கிழி' ரூ.10.000-மணிவிழா எடுப்பு கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க மாநில இலக்கிய அணி, சென்னை -1980

❖ ‘தமிழ்ச் சான்றோர்' விருது, பதக்கம் - தமிழகப் புலவர் குழு, சேலம் - 1983

❖ ‘கலைஞர் விருது'-என்.டி. இராமாராவ் (ஆந்திர முன்னாள் முதல்வர்) கலைஞர் மு. கருணாநிதி, தி.மு.க முப்பெரும் விழா. தேசிய முன்னணித் தொடக்கவிழா சென்னை -1988

❖'பாவேந்தர் விருது' (1987க்குரியது) பொற்பதக்கம்-கலைஞர் மு. கருணாநிதி, முதல்வர், தமிழ்நாடு அரசு, சென்னை -1989

❖‘பொற்கிழி'-விக்கிரமன். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர். காரைக்குடி கவிஞர் இல்லம்-1993.

❖'பூங்கொடி' நூலுக்கு 'இந்திராணி இலக்கியப் பரிசு' ரூ.5,000- இந்திராணி அறக்கட்டளை, கரூர்-1993

❖ சிறந்த தமிழ்த் தொண்டிற்கான ‘அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில்', வெள்ளிப்பேழை, பொற்குவை ரூ.50,000- அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை -1993