இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
உள்ளஞ் சுடுசொல் பொறுப்பதிலை - சொன்னால்
உடனே அழுவேன் வெறுப்பதிலை
கள்ளங் கவடந் தரிப்பதிலை - நீயேன்
கனிவாய் மலர்ந்தே சிரிப்பதிலை?
அழுக்கா றாசை வெகுளியெனும் - நெஞ்சின்
அழுக்குகள் யாவுங் கழுவினை நீ
இழுக்கா மானம் அருளறிவு - அணிகள்
எத்தனை எத்தனை அருளினை நீ!
நின்னருள் மாமழை பொழிந்திடுவாய் - நானும்
நீங்கா ததனுள் நினைந்திடுவேன்
என்னுயிர் நீதான் தமிழம்மா - என்னை
எடுத்தொரு முத்தம் அருளம்மா.
[பாடுங்குயில்]