பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


30. மறந்தறியேன்
எடுப்பு

தாயே உனைநான் மறந்தறியேன் - நின்
தாளலால் வேறெதும் நினைந்தறியேன் - தமிழ்த்

-தாயே


 
தொடுப்பு


நீயே துணையென்று நெஞ்சினில் கொண்டு
நினைந்திடும் மனைதனை மறந்ததும் உண்டு

-தாயே


முடிப்பு


உன்முகம் மலர்ந்தால் என்முகம் மலர
உளமகிழ்ந் திருந்தேன் உலகினை மறந்தேன்
என்முகஞ் சுருங்கிட நன்மனம் வருந்திட
ஏனெனை விடுத்தாய் இடர்தனைக் கொடுத்தாய்

-தாயே


நொந்தே நின்மகன் நுடங்கிடல் நன்றோ ?
நோய்தனை நீக்கிடல் தாய்கடன் அன்றோ?
நந்தா விளக்கே நானென்ன செய்தேன்?
நாளெலாம் இருள்தனில் நலிந்திடச் செய்தாய்

-தாயே
[காவியப் பாவை]