பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

மேலைத் திசை யுடையாள் - ஒருத்தி
மேன்மைக் குண முடையாள்
வாலைக் கும ரியுடன் - நண்பாய்
வாய்மொழி பே சிடுவேன்

நெஞ்சிற் கெடு தியில்லை - அவளால்
நேர்வது நன் மையடி
வஞ்சிக் கொடி யிடையே புலவி
வாட்டந் தவிர்ந் திடடி

நெஞ்சத் தடந் தனில்நீ - உலவும்
நீள்சிறை அன் னமடி
வஞ்சனை இல் லையடி - நீயே
வாழ்க்கைத் துணை வியடி

பேதை மனக் குயிலே - உன்னைப்
பெற்றவள் இல் லையடி
ஏதுக் கடி புலவி - தமிழே
என்னைவிட் டெங் ககல்வாய்?

காலில் சிலம் பொலிக்க - வருவாய்
காதல் மது பருகிக்
கோலப் பெரு வெளியில் - கவிவெறி
கொண்டு திரி வமடி

சோலை வெளியிடையே - நாம்
சுற்றித் திரி வமடி
மாலை நிலா வரவே - தனியாய்
மாடந் தனை யடைவோம்

அங்குநம் கூட்டுறவால் - பிறந்த
அன்புக் குழந்தைகளை
சங்கக் கவிதை என்றே - உலகம்
சாற்றிப் புக ழுமடி

[காவியப் பாவை]]

(இப்பாடல் இந்திய தேசியப் புத்தகக் குழுவினரால் (National Book Trust, India) ஆங்கிலத்திலும், இந்தியிலும்மொழி பெயர்க்கப்பட்டுள்ளது)