இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
79
கொல்லும் வறு மையிலும் - செம்மை
குன்றா திலங் கிடவே
வெல்லும் மன நிலையைத் - தாயே
வேண்டுகி றேன் அருள்வாய்
சொல்லுமென் பா டலினால் - உலகம்
சூழ்ந்து வணங் கிடவே
வல்லமை வேண் டுமம்மா - என்றும் நான்
வாழ்ந்திட வேண் டுமம்மா.
[காவியப் பாவை]]