பக்கம்:முதல் குடியரசுத் தலைவர்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் குடியரசுத் தலைவர் ہـمـکی یعبیٹےحیچیحہ-~ க. தோற்றுவாய் நிலவுலகம் கிலேபெறுதற்குக் காரணமாவார் ஒரு சில நன்மக்களே. அவர்கள் இலராயின் உலகமே அழிக் தொழியும் என்பர் ஆன்ருேர் அன்னர் தங்நலம் கருதாத் தகைமையர். பிறர்க்கென வாழும் பெருந்தகையாளர். சாவாமைக்குக் காரணமாகிய தேவாமுதம் தமக்கு அரி தில் கிடைத்ததாயினும் அதனையும் தனித்து உண்ணுது பகுத்து உண்பர். எவரொடும் வெறுப்பின்றி விருப் புடன் பழகுவர். பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சியிரார். அதனைப் போக்குதற்கு ஊக்க முடன் முயல்வர். புகழ் வருவதாயின் தம் உயிரையும் வழங்குவர். பழி உறுவதாயின் அதனால் உலக முழுதும் பெறினும் கொள்ளார். உள்ளத்தில் எதற்கும் கவலை கொள்ளார். பிறர் நலத்தைப் பேணுதற்குப் பெருமுயற்சி செய்வார். அதற்காகத் தம் உடல் பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்வார். - - இத்தகைய நல்லார்களாலேயே உலகம் நிலைபெற். றிருக்கிறது என்பதைத் தெய்வப் புலவர் திருவள்ளு வரும் வலியுறுத்திச் சொல்லுவார். சிறந்த குணங்கள் நிறைந்த பெருமக்களைச் சான்ருேர் என்றும் பண்புடை யார் என்றும் அறிஞர் பாராட்டுவர். சான்ருேர், உலகில் ஒரு சிலரே நிலவுவர். அவர்களும் தம் சான்ருண்மையில்