பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


2.பொதுவாக நெடுங்கதை படிப்போர் தொகை மிக அதிகம் : ஒரு நெடுங்கதை இல்லாவிடில் வேறொரு நெடுங்கதை எடுத்துப் படிக்க நெடுங்கதை விரும்பிகளுக்கு வாய்ப்புண்டு. ஆனால் பிறர்க்கு அவர் வேண்டிய ஒரு நூலுக்குப் பதிலாகச் சரியான வேறு நூல் கிடைத்தல் இயலாது.

3. நெடுங்கதைக்குக் குறிக்கும் காலத்தின் அளவை விடப் பிறவற்றுக்குக் குறிக்கும் காலம் மிக நீண்டது.

வழங்கு எண்கள் படிப்பின் தரத்தைத் தவறாகக் காட்டும் இயல்பின. நெடுங்கதை பற்றித் தற்கால நூலகங்கள் கவலைப்படுவதில்லை. பிற துறை நூல்கள் வேண்டிய அளவுக்குத் தரப்படுமானால். மக்கள் நூலகத்தை நல்ல முறையில் மிக அதிகமாகப் பயன்படுத்த விரைவில் தொடங்கி விடுவர் என்பதை நூலக அதிகாரிகள் அறிவார்கள். நல்ல நெடுங்கதைகள் நூலகத்தில் இருக்குமானால், பிற நூல்களைப்பொதுவாகவும், நெடுங்கதையைச் சிறப்பாகவும் படிப்போர், அதனால் பெரு மகிழ்ச்சியும், மாற்றமும், மறுமலர்ச்சியும், புத்துணர்வும், அறிவும் பெறுவர்.

பொது நூலகத்திலிருந்து நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் : குறிப்பு நூலகத்து நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது அங்கேயே வைத்துப் படித்தல் வேண்டும். இன்னும் தெளிவாக உரைக்க வேண்டுமானால், நூலகம் என்பது ஓர் அறிவிப்புக் கழகம் : ஒரு தொழிற்சாலை. நூலகம் வருவோரில் பெரும்பாலோர், குறிப்பிட்ட ஏதேனும் செய்தியோ தேதியோ, ஆண்டோ குறிக்கத்தான் வருகின்றனர். எனவே, நூலகத்தின் முக்-