பக்கம்:முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. பழியாப் பத்து


1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   யாப்பிலோரை இயல்பு குணம் பழியார்.

2. மீப்பிலோரை மீக்குணம் பழியார்.

3. பெருமை உடையதன் அருமை பழியார்.

4. அருமை உடையதன் பெருமை பழியார்.

5. நிறையச் செய்யாக் குறைவினைப் பழியார்.

6. முறையில் அரசர்நாட்டு இருந்து பழியார்.

7. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்.

8. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்.

9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.

10. சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.

8