பக்கம்:முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. துவ்வாப் பத்து


1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது.

2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.

3. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.

4. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது.

5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.

6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.

7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.

8. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.

9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.

10. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.

10