இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
நீரறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.
3. ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று.
4. சோராக் கையன் சொல்மலை அல்லன்.
5. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்.
6. நேராமல் கற்றது கல்வி அன்று.
7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.
8. அறத்தாற்றின் ஈயாதது ஈகை அன்று.
9. திறத்தாற்றின் நோலாதது நோன்பு அன்று.
10. மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று.
12