பக்கம்:முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. இல்லைப் பத்து


1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   மக்கள் பேற்றின் பெரும்பேறு இல்லை.

2. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை.

3. வாய்ப்புடை வழக்கின் நல்வழக்கு இல்லை.

4. வாயா வழக்கின் தீவழக்கு இல்லை.

5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை.

6. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை.

7. நசையின் பெரியதோர் நல்குரவு இல்லை.

8. இசையின் பெரியதோர் எச்சம் இல்லை.

9. இரத்தலி னூஉங்கு இளிவரவு இல்லை.

10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும்சிறப்பு இல்லை.

14