பக்கம்:முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. பொய்ப் பத்து


1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   பேரறிவினோன் இனிது வாழாமை பொய்.

2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய்.

3. கள் ளுண்போன் சோர்வின்மை பொய்.

4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.

5. மேல்வரவு அறியாதோன் தற்காத்தல் பொய்.

6. உறுவினை காய்வோன் உயர்வுவேண்டல் பொய்.

7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.

8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.

9. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்.

10. வாலியன் அல்லாதோன் தவம்செய்தல் பொய்.

16