பக்கம்:முதுமொழிக் காஞ்சி-மூலமும் உரையும்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


9. நல்கூர்ந்த பத்து


1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
   முறைஇல் அரசன்நாடு நல்கூர்ந் தன்று.

2. மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று.

3. செற்றுஉடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்தன்று.

4. பிணிகிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று.

5. தன் போற்றாவழிப் புலவி நல்கூர்ந்தன்று.

6. முதிர்வுடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று.

7. சொல் செல்லாவழிச் சொலவு நல்கூர்ந்தன்று.

8. அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று.

9. உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று.

10. நட்பு இல்வழிச் சேரல் நல்கூர்ந்தன்று.