பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 & முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. வி. வெளிவந்துள்ளது.) எம்ஃபில், பிஎச்.டி மாணவர்களை உருவாக்கியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல் வடிவம் பெற்றுள்ளன. பெற்றும் வருகின்றன. தவிர, ஆசிரியம் கல்வி உளவியல் (5), இலக்கியம் (22), சமயம் தத்துவம் (35), வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு (13), திறனாய்வு (19), அறிவியல் (20), ஆராய்ச்சி (6) ஆக 120 நூல்களை வெளியிட்டவர். இவர்தம் அறிவியல் நூல்களில் மூன்றும், சமய நூல்களில் மூன்றும், தமிழக அரசுப் பரிசுகளையும், அறிவியல் நூல்களில் ஒன்று தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசினையும் அறிவியல் நூல்களில் ஒன்று சென்னைப் பல்கலைக் கழகப் பரிசினையும் ஆக நூல்கள் பரிசுகள் பெற்றன. இவர்தம் அறிவியல் நூல்களைப் பாராட்டி குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 'அருங்கலைக்கோன்' என்ற விருதையும் (1968), வைணவ நூல்களைப் பாராட்டிப் பண்ணுருட்டி வைணவ மாநாடு ரீசடகோபன் பொன்னடி, என்ற விருதையும் (1987), தமிழ்ப் பணியைப் பாராட்டி தமிழக அரசு திரு வி.க. விருதையும் (10,000 வெண் பொற்காசுகள்) (1987), இவர்தம் தமிழ்ப் பணியைப் பாராட்டி மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்ற விருதையும் (1991), இராசா சர் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளை கல்வி, இலக்கியம் அறிவியல் என்ற மூன்று துறைகளில் இவர்தம் பணியைப் பாராட்டி இராசாசர் முத்தைய வேள் விருதையும் (1994) (50,000 வெண்பொற்காசுகள்) இவர் தம் கம்பன் பணியைப் பாராட்டிசென்னைக் கம்பன் கழகம் பேராசிரியர்இராதாகிருஷ்ணன்விருதையும் (1994-1000 வெண் பொற்காசுகள்), சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவர்தம் வைணவ வெளியீடுகளைச் சிறப்பிக்கும் முறையில் இராமாதுசர் விருதையும் (1996 - 25000 வெண்பொற்காக்கள்) வழங்கிச் சிறப்பித்துள்ளன. இனிமை, எளிமை, தெளிவு இவர் தம் நூல்களின் தனிச்சிறப்பியல்புகள். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி. அவர்களுடன் 1934 முதல் அவர் மறையும் வரை (1994) தொடர்புடையவராக இருந்தவர்.