பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. முத்தமிழ்க் காவியம் பாடிய முனிவர்

தமிழ்த்தாயின் திருவடிச் சிலம்பு

'ஐம்பெருங் காவியங்கள்' என்று போற் றப்பெறும் ஐந்து அரிய நூல்கள் தமிழில் உள்ளன. அவற்றுள் சிறந்தது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியம் ஆகும். இது கண்ணகி என்னும் கற்பரசியின் காற்சிலம் பால் விளைந்த கதையை விளக்கும் நூலாகும். தமிழில் தோன்றிய முதல் காவியம் இச்சிலப் பதிகாரமே. இஃது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவிய முத்தமிழ்க் காவியம் ஆகும். அதனால் இந்நூலே 'இயலிசை நாடகப் பொருள் தொடர்கிலச் செய்யுள்' என்று அறிஞர் போற்றுவர். இகனைத் தமிழ்த்தாயின் திருவடிச் சிலம்பு என்றே புலவர் போற்றுவர்.

"நெஞ்சை - அள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் மணி ஆரம்படைத்த தமிழ்நாடு"

என்று இந்நூலைக் கவிஞர் பாரதியார் பாராட்டினர்.

சிலம்பைப் பாடிய இளங்கோ

இத்தகைய முத்தமிழ்க் காவியத்தைப் பாடிய புலவர் ஒரு முனிவர் ஆவர். சேர