பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மாணவர் போப்பையர் 81

திருவாசகத்தை மொழிபெயர்த்தல்

மேலும், போப்பையர் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ்நாட்டில் திரு வாசகத்திற்குப் பெருமதிப்பு உண்டு. படிப் பவர் உள்ளத்தை உருக்கிப் பத்தியைப் பெருக்கும் பான்மை உடையது அந்நூல். 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத் திற்கும் உருகார்' என்பது இக்காட்டில் வழங்கும் பழமொழி ஆகும். தேனூறும் திருவாசகப் பாடல்கள் அறுநூறும் போப் பையர் ஆராய்ந்து கற்ருர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக இருந்தபோது அந்நூலே மொழிபெயர்க்கத் தொடங்கினர். அப்போது அவருக்கு எழுபத்தேழு வயது. இவ்வளவு முதுமைப் பருவத்தில் தொடங்கிய பணி இனிது முடியுமோ? என்று ஐயுற்ருர்.

அன்பர் உரைத்த உறுதிமொழி

ஒருநாள் மாலையில் போப்பையர் தம் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருங் தார். அவரிடம் திருவாசகத்தின் பெருமையை எடுத்து உரைத்தார். இத்தகைய நூலே முழுதும் முடித்து என் வாழ்நாளில் அச்சிட்டு வெளியிடவேண்டும் என்று விரும்புகிறேன்; எனது வாழ்நாள் அதுவரை இருக்குமோ?

تأسس - صرو له . مgم