பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வத் தமிழ் வளர்த்த தாயுமானவர் 87

களுடன் பெருமையாக வாழ்ந்துவங்தார். அரசர் தமக்குத் தந்த பணியைத் திறமையாகச் செய்து அவரை மகிழ்வித்து வங்தார். கேடிலியப்பர் மகப்பேறு வேண்டுதல்

கேடிலியப்பருக்கு ஆண்குழந்தை ஒன்று இருந்தது. அப்பிள்ளைக்குச் சிவசிதம்பரம் என்பது பெயர். கேடிலியப்பரின் தமையனர் நீண்ட நாளாகப் பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்தினர். அதல்ை கேடிலியப்பர், தம் மகனாகிய சிவசிதம்பரத்தைத் தமையனருக்கு வளர்ப்பு மகனுகக் கொடுத்தார். பின்பு தமக்கு ஒரு மகப்பேறு வேண்டும் என்று எண்ணினர். திருச்சிராப்பள்ளியை அடைந்த கேடிலியப்பர் அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனே வணங்கி மகப்பேறு அருளுமாறு வேண்டிக் கொண்டார்.

சிராப்பள்ளிக் குன்றுடையான்

திருச்சிராப்பள்ளியில் சிறிய குன்று ஒன்று உண்டு. அக்குன்றின்மேல் திருக் கோயில் ஒன்று விளங்குகின்றது. அக் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் தாயு மானவன் என்னும் திருப்பெயர் உடையான். அப்பெருமானுக்குத் தாயுமானவன் என்ற பெயர் ஏற்பட்டதற்கு வரலாறு ஒன்று வழங்குகிறது.