பக்கம்:முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்

அமர்ந்த சிவபெருமானே எனக்குத் தாயுமா ன்ை என்று உள்ளம் உருகிள்ை. அன்று முதல் அத்தலத்தில் அமர்ந்த இறைவனுக் குத் தாயுமான வன்' என்னும் பெயர் வழங்கத் தொடங்கியது.

கேடிலியப்பருக்குத் தாயுமானவர்

அத்தாயுமானவர் அருளால் கேடிலி யப்பருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது: அக்குழந்தைக்குத் தாயுமானவன்' என்றே பெயர் சூட்டினர். அக்குழங்தை வளர்ந்து ஐந்தாண்டுப் பருவத்தை அடைந்தது. தங்தை யார் தாயுமானவனைப் பள்ளிக்கு வைத்தார். பள்ளிக் கல்வி முடித்த பிள்ளையைத் தக்க நல்லாசிரியரிடம் விடுத்தார். தாயுமானவர் தமிழ் நூல்களையும் வடமொழி நூல்களையும் தக்கவாறு கற்றுத் தேர்ந்தார். தேவாரப் பாடல்களின் தீஞ்சுவையைப் பருகினர். திருவாசகப் பாடல்களின் கனிவை அனு பவித்தார். இறைவன் திருவருளே கினேங்து உருகினர்.

தாயுமானவர் தலைமைக் கணக்கர்

இ வ் வா று தாயுமானவர் கற்றுத் தேர்ந்து விளங்கும் நாளில் தங்தையார்