பக்கம்:முத்தம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


அவளுக்குப் புரியும் என்று தனக்குத்தானே உபதேசித்தார் அவர்.

 

8

காலம் ஓடிக்கொண்டிருந்தது.

பத்மா ரகுராமன் இருவரிடையிலும் வளர்ந்த அன்பு முற்றி வந்தது. ஆணும் ஆணும் நல்ல நண்பர்களாக வாழ முடிவது போலவே, ஆணும் பெண்ணும் விகார நினைவுகளுக்கு இடம் கொடாமல் நட்பு முறையிலே பழகலாம் என்பதற்கு தாங்களே உதாரணம். நாங்கள் இவ்வித நட்பை-மருவிலா அன்பை.... வளர்த்து புனிதவாழ்வு வாழ்வோம் என்று பத்மாவும் ரகுராமனும் நினைத்தார்கள்.

அவர்களின் உறவு நெருக்கம் கனத்து வருவதைக் கண்டு கிழவர் சிரித்தார். அவருக்கு எல்லையிலா மகிழ்வு. அதன் காரணம் பத்மாவுக்குப் புரிய வில்லை தான் உல்லாசமாக இருப்பதனால் அவர் உற்சாகம் அதிகரித்திருக்கிறது என்று நம்பினாள்.

பத்மாவுக்கு அவளது உணர்ச்சிகளையே புரிந்து கொள்ள முடியவில்லை என்றே கூற வேண்டும். ரகுராமன் எப்போ வருவான், எப்போ வருவான் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதை அவள் தடுக்க முடியவில்லை. அவன் தூரத்தில் வருகிறான் எனத் தெரிந்ததும் எழும் உணர்ச்சிக் கிளுகிளுப்பை ஒடுக்க இயலவில்லை. அவன் வரும் முன் கண்ணாடி முன் நின்று சிரத்தையோடு அழகு செய்வதை அவள் குறைக்கத் தயாராகயில்லை. அவன் வர நேரமாகிவிட்டால் 'ஏன் இன்னும் வரக் காணோம் ?' என்று கவலைப்பட்டு அமைதியற்றுத் திரிவதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி அவளுக்கில்லை. ஒருநாள் அவன் வராமல்போனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/37&oldid=1496645" இலிருந்து மீள்விக்கப்பட்டது