பக்கம்:முத்தம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7


கண்ணாடிக் கோப்பைகளைக் கீழே போட்டதும் எழுதுவதுபோல் தெறித்து ஒலித்தது பெண்களின் சிரிப்பு பத்மாவின் முகம் சிவந்தது. 'போங்களடி.. வேலையற்றுப்போய்...' என்று முனங்கினாள்.

புஷ்பா லேசில் போக விடுவாளா அவளை! ‘என்ன இருந்தாலும் பெண்தான் பத்மா. பிரமாதமாகப் பேசினாய். ஆனால் வெட்கம் உன் மூஞ்சியில்........' என்றாள்.

'சரி சரி! உன்கிட்டேதான் கேட்டாங்க என்று எரிந்து விழுந்து, அவளே உதறிவிட்டு நகர்ந்தாள் பத்மா.

தோழிகளின் உல்லாசச் சிரிப்பு அருவி நீர் போல் துள்ளிக் குதித்துக் கலகலத்தது.


2

தோழிகளோடு உல்லாசமாகப் பேசிக்கொண்டிருந்த போது உணர்ச்சிப் பரவசத்திலே தான் வர்த்தைகளைக் கொட்டி விட்டாள் பத்மா என்றாலும், காற்றிலடிபட்டுவரும் வித்து தானாக நிலத்தில் எங்கேனும் விழுந்ததும் முளைவிட்டுச் செடியாகிப் பெரிதாக வளர்ந்து விடுவதுபோல, உள்ளத்தில் முளைத்த எண்ணம் வலுவுற்று வளர்ந்துகொண்டிருந்தது.

ஆமாம். ஏன் அப்படி இருக்கக் கூடாது? கல்யாணமே செய்து கொள்ளாமல், ஆண்களோடு உறவு கொள்ளாமலே வாழ முடியாதா என்ன? எனக்கு அது சுத்தமாப் பிடிக்கவவே யில்லை. கல்யாணம், குடும்பம், பிள்ளை பெறுவது...ஒரு பிள்ளை பிறகு ஒரு பிள்ளை, பிள்ளையோ பிள்ளை ...பிறகு, திரும்ப- மீண்டும் பிள்ளை.பிள்ளையோ பிள்ளை. இதற்குத் தானா பெண் ஜன்மம்? அப்படி யென்றால் கல்லூரிப் படிப்பு எதற்கு? தாலி கட்டப்படுவதும், குடும்ப அலுவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/9&oldid=1496116" இலிருந்து மீள்விக்கப்பட்டது