பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வீட்டில், அவருக்காக அவருடைய மனைவி, வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பாள். தந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள் அருமை மக்கள். குடும்பத் தலைவரின் வீடு திரும்பல் எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி அளிக்கும். பெரிய மனிதருக்கு இந்த நினைப்பே அதிக ஆனந்தம் தந்தது. அவர் உள்ளம் கும்மாளி யிட்டுக் கொண்டிருந்தது. உணர்ச்சித் துடிப்பால் பரபரத்த அவர் எல்லோரிடமும் தன்னைப்பற்றியும், தனது மனைவி மக்கள் பற்றியும், அவர்கள் ஆவலுடன் ரயில் திலேயத்தில் காத்திருக்கக் கூடிய பெருமை பற்றியும் உற்சாகமாகப் பேசினர். ரயில் ஒவ்வொரு பெரிய ஸ்டேஷனை அடையும் போதும் அவர் பர பரப்புடன் இறங்கிப் போவார். சந்தோஷம் படர்ந்த முகத்தோடு திரும்புவார். இப்போது ரயில்வண்டி இந்த ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறது; இவ்வளவு நேரத்தில் அங்கு வந்து சேரும் என்று என் மனைவிக்கு தந்தி கொடுத்தேன்’ என்று பூரிப்புடன் சொல்வார்.

அவருடைய உற்சாகமும் பரபரப்பும் மற்றவர் களுக்கு முதலில் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் தோன்றியது. பிறகு பரிகாசத்துக்குரியது போல் பட்டது. அவரே பரிதாபத்துக்கு உரிய நபராகி விட்டார் இறுதியில்.

அவர் இறங்க வேண்டிய நிலையம் வந்தது. அவ ருடைய பரபரப்பும் உற்சாகமும் அதிகரித்தது. அதோ, அவர்கள் வந்து காத்து நிற்கிருர்கள். எல்லோரும் என்ன ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள் என்று நான் சொல்லவில்லையா?... இப்படிப் பெருமை பேசி ஞர் அவர்.

அவருடைய மனைவியும் மக்களும் பிறரும் மகிழ் வோடு கைகளே ஆட்டிக்கொண்டு முன்னே வந்தார்கள். பிளாட்பாரத்தில் ஆரவாரித்து, குதூகலத்தின் உயிர்ச்