2 I 2
கள். அதற்கு முன்பாக ஏகப்பட்ட தகராறுகள்
சில்லறைச் சண்டைகள்.
' மன்னியை அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போய்விட்டு வாயேன் அண்ணா?' ' என்று பவானி கோமதிக்காகப் பரிந்து பேசினாள்.
'நிதான் போயேன் மன்னியை அழைத்துக் கொண்டு. நான் 'பிஸினஸ் விஷயமாக ஒருத்தரைப் பார்க்க வேண்டும் என்றான் அவன் .
பவானி 'பக் கென்று சிரித்தாள்.
"நல்ல பிஸினஸ்! பணம் எதற்கண்ணா சம்பாதிப் பது? வாழ்க்கையை அனுபவிக்கத் தானே?' '
நாகராஜன் தன் சுழல் நாற்காலியில் இப்படியும் அப்படியுமாக மூன்று முறைகள் சுழன்றான்.
'இப்போது நாம் என்ன ச் பணத்தை சம்பாதித்து அனுபவிக்காமல் தான் இருக்கிறோமா! மேலே மின்சார விசிறி சு 2ல்கிறது. கூடத்தில் ரேடியோ பாடுகிறது. ப்ரிஜிடேர் வாங்கிப் போட்டிருக்கிறேன். வைர நெக்லெஸ் வாங்கி இருக்கிறேன்.
"ஆமாம் இத்தனையும் வைத்துக் கொண்டு சிறை வாசம் பண்ணச் சொல் கிறீர்களாக்கும்! நாலு இடங் களுக்குப் போய் வந்தால்தான் மனசுக்குத் தெம்பு. எங்கே என்னைப் பார்த்துச் சொல்லுங்கள். பக்கத்தில் இருக்கிறதே வடபழனி ஆண்டவன் கோயில், ஒரு தி ள வது எதற்காவது போன துண்டா ? நீங்கள் திருவல்லிக்கேணியில் மெரினாவுக்கு ஒருநாள் போயிருக் கிறீர்களா? ப்ரிஜி டேரும், சிரிஜிடேரும் யாருக்கு வேண்டும் இங்கே?' என்று பேசினாள் கோமதி.
நாகராஜன் சிரித்தான்.