பக்கம்:முத்துச் சிப்பி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 6

அவளைப் பிடித்து வாட்டியது. அந்த வீட்டிலே வெட்டி யாக உட்கார்ந்து தண்டச் சாப்பாடு சாப்பிடுவதாகவே ராதா நினனத்தாள். மற்றப் பெண்களைப் போல அவள் மனதிலும் பல ஆசைகள் தளிர் விட்டன. கணவன் சம்பாதித்து வருவதை வைத்துக் கொண்டு அழகாக செட்டாக, இன்பமாகக் குடித்தனம் நடத்த வேண்டும். வேளா வேளைக்குச் சமைத்துக் கணவனுக்குப் போட்டு அவனைக் காரியாலயம் அனுப்ப வாசலில் வந்து வழி அனுப்பி, மாலையில் அவன் வீடு திரும்புவதை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க வேண்டும் என்று விரும்பி னாள் ராதா.

கணவனுடன் கடற்கரை செல்ல வேண்டும்; நாடகம் பார்க்க வேண்டும்; கோவிலுக்குப் போக வேண்டும்; எல்லாவற்றிற்கும் மேலாக "காதல் இருவர் கருத்தொருமித்து இல்லறம் நடத்த வேண்டும் என்கிற ஆவள் அவல் மனதை சூழ்ந்து கொண்டு வாட்டியது.

தனக்கும் மூர்த்திக்கும் இடையில் பல மைல்கள் துாரம் இருப்பதையும் மறந்து ராதா சிந்தனையின் வசப்பட்டவளாகச் சட்டென்று பீரோவைத் திறந்து தன் துணிமணிகளை எடுத்துப் பெட்டியில் வைத் தாள். இனிமேல் அந்த வீட்டில் இருக்க விருப்பமில்லாதவள் போல் அவளுடைய முக்கியமான வஸ்துக்கள் யாவையும் பெட்டியில் வைத்துப் பூட்டினாள். அந்த வினாடி அவள் மனத்தில் அந்த வீட்டுக்கும். அவளுக்கும் சம்பந்த மில்லாத ஒர் உணர்ச்சி தோன்றியது. உடனே எப்படி யாவது மூர்த்தியின் இருப்பிடத்துக்குச் சென்று விட வேண்டும் என்கிற ஆசை அவள் மனதில் எழுந்தது.

கடைசியாகப் பணப் பையில் ரூபாயை எடுத்து அவள் வைத்துக் கொண்டிருக்கும் போது அறையின் வாசற்படியில் சுவாமிநாதன் தள்ளாடிக் கொண்டே வந்து நின்றார்.