பக்கம்:முத்துச் சிப்பி.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 6 O

அவனுடன் இல்லறம் நடத்துவது. அதன் பிறகு இடுப் பிலே ஒரு தங்கக் குழந்தை!

ராதா புன் முறுவல் பூத்துக்கொண்டே கண் விழித் தாள். நினைக்கும் போது இனிக்கு ம் நினைவுகள் நடக்காமற் போனால் கசக்கத் தானே செய்யும்?

அவள் எதிரில் வெற்று நாற்காலி கிடந்தது. பல இரவுகள், அநேக நாட்கள் அந்த நாற்காலிக்கு வேலையே இல்லை. மூர்த்தி அதில்தான் உட்காருவான். அவன் வெளியூர் போன பிறகு அதில் யாருமே உட்காரு வதில்லை. கணவன் திரும்பவும் அதில் வந்து உட்கார வேண்டும் என்று அந்தப் பே ைதக்கு ஆசை.

கீழே இறங்கி வந்து தன் அ லுவல்களை முடித்துக் கொண்ட ராதா, சுவாமிநாதனின் இருப்பிடத்துக்கு வந்தாள். அந்தக் கிழவர் அன்று என்று மில்லாத உற்

சாகத் துடன் காலையி லேயே குளித்து விட்டு, திருநீறு

அணிந்து உட்கார்ந்திருந்தார்.

என்ன இதற்குள்ளாகவே குளித்து விட்டீர்களா?" என்று விசாரித்தவாறு ராதா அவர் அருகில் சென்று .டர்ந்தாள் |سکے۔

குளித்துவிட்டேன் அம்மா. நேற்றிலிருந்து எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது..."

'அப்படியா? என்ன அது?

. இந்த உடம்பை இத்தனை காலம் காப்பாற்றியாகி விட்டது. ஜலதோஷம் பிடித்தாலும் ஆயிரம் மாத்திரை களை விழுங்கி உயிரைப் பிடித்து வைத்துக் கொள்ள முயற்சி செய்தாயிற்று. அதைப் பற்றிக் கவனிக்கவே உன் அண்ணன் இருக்கிறார். உள்ளத்துக்கு ஒரு வைத் தியனைத் தேட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. அவனை இனிமேல் நினைத்து அதற்கு வேண்டியதைச்