பக்கம்:முத்துச் சிப்பி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சுக் கருத்துக்கள் நாவல்கள் மூலம் பரவலாக விதைக்கப்பட்டு வரும் இந்நாளில் நல்ல பண்புகளை அறியச் செய்யவும் எழுத்தைப் பயன்படுத்த முடியும் என்பதற்கு இந்நாவல் ஒர் எடுத்துக்காட்டு.

ஆசிரியர் வாசகர்களுக்கு நன்கு அறிமுக மானவர். சமூகத்துக்குப் பயன்படும் கருத் துள்ள கதைகளைப் பல ஆண்டுகளாக எழுதி வருபவர். முத்துச் சிப்பி அவருக்குப் பெருமை சேர்க்கும் படைப்புகளில் ஒன்று. இதனை எங்கள் பதிப்பக வாயிலாக வெளியிட அனுமதி அளித்த அவருக்கு நன்றி.

எஸ். சங்கரன் பதிப்பாசிரியர்