பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 3 முத்துப்பட்டனைத் தேடி தமையன்மார் வரல் ஆரிய நாடதிலே ஆறண்ணன் மார்கூடி சண்டையிட்டுப் போனதென்று தம்பியைத்தான் தேடியல்லோ வாராரே ஊர்க்கொருவர் வழிமேலே தேடிக்கொண்டு அம்பலப் புழைதனிலே மகாதேவருட கோவிலிலே அத்தாள மவதரித்து அடுத்தநாள் தேடிவாரார் கொட்டாரக் கரைதனிலே ராமராஜ ஊரதிலே ஊரெல்லாம் தேடியவர் ஒய்ந்திருக்கம் வேளையிலே வைதீகனொரு பார்ப்பான் வந்தவர்களண்டையிலே "வாருங்கோ பட்டன்மாரே வாடியிருப்பானேன்" "அய்யாவே பெரியவரே ஆசிர்வாதஞ் சொல்லக்கேளு எங்களுக் கிளையதம்பி ஏற்றஆரிய முத்தப்பட்டன் பட்டுநல்ல குடைபிடித்து பாப்பாசி காலில்மாட்டி" உத்தரியந் தோளில்மாட்டி உல்லாசமாக வாரான், அரண்மனைக்குப் போவதற்கு ஆணழகன் வாரபோது கண்டாரே யண்ணன்மார்கள் கட்டழகன் பட்டனைத்தான். ‘என்பிறவி என்பிறவி உன்னைக்கண் டெத்தனை நாளாச்சுதடா தாயுந் தகப்பனாரும் தவித்தல்லோ தேடுகிறார் சேஷய்யர் பெண்ணையல்லோ சிறப்பூட்டக் கேட்டிருக்கு திரவியங்க ளுண்டுமானால் சீமைக்குப் போய்விடலாம்" என்றுசொல்லி பட்டனவன் ஏற்ற மனைதனிலே மன்னனிடம் முத்துப்பட்டன் விடைபெற்றுப் பரிசுகள் பெறுதல் சொல்லுவான் ராஜனிடம் சோதிமுத்து" வாய் திறந்து அன்னண்மார் வந்ததும் அவர்கள் சொன்ன சங்கதியும் அப்போது அரசமன்னன் அவனுடைய சம்பளத்தை சாளியல் சாளியலாய்" "சம்பளமுந் தான்கொடுத்து காதுக்கு முத்துக்கடுக்கனும் கண்டசரமாலையுங் கொடுத்தான். கைவிரல்பத்துக்கும் கல்வைத்த மோதிரம் கஞ்சப்பூபஞ்சரத்னம் யாளி முடுகுடனே வீரச்சங்கிலி நல்முத்துப் பாசியிந்து ராசிமாலை தங்கக்காசி மாலையுடன் நல்லசுட்டிப்பதக்கம் வீராவாளிப்பட்டு தங்கச்சரப்பளி மேலுக்கு உத்தரியம்