இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42. முத்தேவியர் வணக்கம்
கல்விக் குரிய கலைமகளே!
கலைகள் பலப்பல எமக்கருளே.
செல்வம் கொழிக்கும் திருமகளே!
சிறப்பாய் வாழ்ந்திட எமக்கருளே.
1
வலிமைக் குரிய மலைமகளே!
வளமுறத் திருவருள் புரிந்தருளே.
தலையால் வணக்கம் புரிகுவமே
தயவாய்க் காத்தருள் மூவருமே.
2
61