பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[44] அது கிட்டுமா ? அக்காலத்தில் கணவன்மார் ரோடுவதற்கு மனைவிமார் மணப் பொடி இடிப்பது வழக்கம். அரண்மனையின் அந்தப்புரத்திலும் அரசரின் தேவியர் இவ்விதச் செயலை மேற்கொள்ளும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி இடிப்பதற்குத் தனியான கூடம், கல்ல வயிரத்தாலாகிய மர உரல், தங்கப்பூண்கட்டிய உலக்கை முதலிய எல்லா ஏற்பாடுகளும் இருந்து வந்தன. இடிக்கும்போது பாடுவதற்குப் பாடல்களும் இருந்தன. உலக்கை போடும்போது பாடும் பாட்டு வள்ளைப் பாட்டு என வழங்கி வந்தது. மூவேந்தர்களைப்பற்றியன வாக மிகப் பல வள்ளைப் பாடல்களும், கொடி தேர் முதலிய பத்து உறுப்புக்களைப்பற்றிப் பாடுவதாகிய பாடல்களும் (தசாங்கம்) அக் காலத்தில் மிகுதியாக வழங்கி வந்தன என்பதைச் சிலப்பதிகாரம் போன்ற நூல்களால் அறியலாகும். கலித்தொகையிலும் இத்தகைய குறிப்புக்கள் காணக் கிடக்கின்றன. இந்தப் பாடல்களைத் தோழிய ருடன் பாடிக்கொண்டு மனைவியர் சுண்ணம் இடிப்பர். X X. X ஒருநாள் மங்கல முழக்கம் கேட்டு வாயிலுக்கு வருகின்ருள் கங்கை யொருத்தி. தெருவில் இப்பக்கமும் அப்பக்கமுமாக நோக்கு கின்ருள். ஒன்றுங் காணப்பெறவில்லை. சோர்வுடன் வீட்டினுள் செல்கின்ருள். திரும்பவும் ஒலி காதில் விழுகின்றது. ஆர்வத்துடன் மீண்டும் வெளியே வந்து தெருவாயிலின் கதவருகிலிருந்துகொண்டு

  • பாடல்சால் முத்தம் பவள வுலக்கையால்

மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன் றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் வேப்பந்தார் நெஞ்சுவக்கும் பாடலே பாடல். -சிலப் வஞ்சிக் வாழ்த்துக் காதை-27 என்பது பாண்டியனைப் பற்றிய வள்ளைப் பாட்டாகும் ,