பக்கம்:முந்நீர் விழா.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

முந்நீர் விழா



வழியே சென்ற ஒருவர் குளத்தில் நின்று கொண்டிருந்த வள்ளலைப் பார்த்தார்.

"ஏன் இங்கே நிற்கிறீர்கள்?' என்று கேட்டார். "முதலில் உம்முடைய மேலாடையை இப்படி வீசும்" என்றார் வல்லாளர். அவர் அப்படியே செய்ய அதை உடுத்துக்கொண்டு கரையேறனார். அதற்குள் வேறு இருவர் வந்துவிட்டார்கள். அவர்கள் தம் மேலாடைகளை வழங்கினார்கள். 'ஏன் இப்படி இருக்க வேண்டும்? யாரேனும் வழிப்பறி செய்தார்களா?” என்று கேட்டார்கள் அவர்கள். அவர் ஒருவாறு நிகழ்ந்ததை அறிவித்தார். புலவர்மேல் குற்றம் சாராதவாறு சமற்காரமாகத் தாமே வாக்களித்து அகப்பட்டுக்கொண்டதாகச் சொன்னார். அதைக் கேட்ட யாவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள். - -

விரைவில் வீட்டிலிருந்து ஆடைகளை வருவித்து அணிந்துகொண்டு, வல்லாளர் காஞ்சிக்குப் புறப்பட்டார். அரசனைக் கண்டு உரையாடி யிருந்தார். மறுபடியும் ஊர் வந்து சேர்ந்தார்.

அங்கே அவருக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது; அவரிடம் கொடை பெற்ற புலவர் அங்கே ஒரு மூட்டையுடன் காத்துக்கொண்டிருந்தார். வள்ளல் தம் வீட்டை அடைந்தவுடன் புலவர் தம் கையிலிருந்த மூட்டையை அவர் முன் வைத்து நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்து எழுந்தார். அவர் கண்ணில் அருவி பாய்ந்தது. விம்மியபடியே பேசலானார்,

"தங்களைப் போன்ற கொடையாளியை நான் பார்த்ததே இல்லை. தங்கள் பெருமைகளைக் கேட்டறிந்த நான் தங்களைச் சோதிக்க வேண்டும் என்றே திட்டமிட்டு வழி மறித்து இந்தக் காரியத்தைச் செய்தேன். தாங்கள் சோதனையில் வெற்றி பெற்றீர்கள். நான் செய்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/83&oldid=1214795" இலிருந்து மீள்விக்கப்பட்டது