12
நூல்:
முன்னும் பின்னும்
2. பாஸ்கர தாஸ்
பச்சைவளை மிச்சம்பதி னாறுலட்சந் தானே - விலை
பகர்வேன் மச்சமானே - மகா உயர்வுளது தானே - இதைப் பார்க்கப்பசி தீருங்கரஞ் சேர்க்கவேசெந் தேனே, அணிவயிர மாயிரம்பொன் அன்னநடை மாதே -விலை
சொன்னது தப்பாதே - ஒளிர் மின்னலு மொப்பாதே - இதை அணிபவர்க்கே கலியாணம் ஆகிடுமிப் போதே. தங்கவளைக் கங்கணங்கள் நங்கையுனக் கினமாய் - நானே
தருவேன் நல்ல குணமாய் - நீயும் அணிவாய் மகிழ் மனமாய் - உன்றன் தவளநகை இதழுமிரு தனந்தருவாய் சுகமாய்.
பூரீமுருகன் திருவிளையாடல் என்னும் வளையற்சிந்து (1896),
நூலாசிரியர் : தஞ்சை கருத்தாட்டாங்குடி அஷ்டாவதானம் P.இராமசாமி பிள்ளை, பாடல் : 23. 24, 25
படம் :
崇
வளையல் வாங்கலையோ அம்மம்மா வளையல் வாங்கலையோ --- ஒரு மாசில்லா சிந்து சுதேச வளையல் வச்சிரம் பதித்த உச்சித வளையல் மங்களம்சேர் தங்கவளையல் சிறு பைங்கொடியாள் பூணும் வளையல் பொன் (வளை) பலவித வளையல் மஞ்சநிறப் பஞ்சவர்ண வளையல் - இந்தப் பச்சை வளையல்பொன் லக்ஷம்விலைபெறும் பருவப் பெண்களின் மனதைக் கவரும் பார்த்துவிலை கேட்டு மகிழ்வீர்! கையில் கீர்த்திபெற சேர்த்து அணிவீர்!
வள்ளித் திருமணம் (1932), பாடலாசிரியர் : பாஸ்கரதாஸ்,
பாடியவர் : M.துரைசாமி.
崇
சுந்தரஞ்சேர் தாமரையைச் சடைப்பாசி சூடிவந்தான்
அழகாய்த் தோன்றும்
சந்திரற்குக் களங்கமிகுந் திருந்துமதன் ஒளிகுறையாத்
தன்மை போல