26 - முன்னும் பின்னும்
ஆசைக்கோ ரளவே இல்லை
ஆதலால் அச்சம் வேண்டாம் நேசத்தை மறவேன் காம
லீலையே எவர்க்கும் நன்றாம். நூல் : பீஷ்மர் பிரதிக்ணை (1933), பக்கம் : 15, நூலாசிரியர்: ச.சு.சங்கரலிங்கக் கவிராயர்.
இது ஒரு பெரும் ரகசியம் - நான் எடுத்துச் சொல்லுவேன் அதிசயம் ததி இது உங்கள் பரிச்சயம் தன்னை வேண்டினேன் நிச்சயம் சமாச்சாரம் அவசியம்.
படம் : அதிருப அமராவதி (1935), பாடல் : 20, பாடலாசிரியர் : எஸ்.எஸ்.சங்கரலிங்க கவிராயர், இசை : ரங்கசாமி நாயகர் - குழுவினர்.
崇
எனக்கே வெட்கமாகி விட்டது. கானா நான்...
இரண்யவேளையில் ... மந்தகாச இருட்டில்... உனக்குச் சந்திப்பாய்... எனக்கு தரிசனமாய் - அந்த தரிசன சந்திப்பு நிகழ்ந்தே விடுகிறது. இதோ, பரிபூரண வெளிச்சம் பந்தாய் உன்முக ரூபத்தில் தலைகவிழ்ந்து கொண்டேன். அச்சம் மடம் நாணம் முதன்முதலாய் அரங்கேறின. நான் பெண்ணென்பது எனக்கே மெள்ளப் புரியலானது. அடடா இப்போதுதான் எனக்கு விழிப்புக்காலமோ? சிறகு முளைத்த என் பெண்மையினால் நான் முதன்முதலாய்ப் பார்த்தது உன் செவ்வந்திப் பூமுகம்தான். அன்னம் பழித்தநடை ஆலம் பழித்தவிழி அமுதம் பழித்த மொழியாள் பென்னம் பெருத்தமுலை கன்னங் கறுத்தகுழல்
சின்னஞ் சிறுத்த இடையாள்