பக்கம்:முன்னும் பின்னும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 85

எல்லாம் இருக்கும்.

உண்மையோடு நன்மையெல்லாம்

நல்லா செழிக்கும் படம் : பாலாபிஷேகம், பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : வாணி ஜெயராம், இசையமைப்பாளர் : சங்கர் - கணேஷ்.

ஆல மரத்துக்கிளி

அக்கரையில் மேயுங்கிளி

இக்கரை வந்தகிளி - கந்தையா

இங்கிதம் சொல்லுதையா! நூல் : தமிழக நாட்டுப் பாடல்கள்,தொகுப்பாசிரியர் : கவிஞர் மா. வரதராசன்,பகுதி : வேதாந்தப் பாடல்கள், பக்கம் : 324.

ஆலமரத்துக்கிளி - ஆளப்

பார்த்து பேசும் கிளி

வால வயசுக்கிளி - மனம்

வெளுத்த பச்சைக்கிளி. படம் : பாலாபிஷேகம் (1977), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : வாணி ஜெயராம், இசை : சங்கர் - கணேஷ்.

மலைக்கு மலைநடுவே மலையாள தேசமெங்கும்

அதட்டிச் சிறையெடுக்கும் ஆறுமுகத் தையாவே. நூல் : சுவாமிமலை ஆண்டிப்பண்டாரம்(1926), நூலாசிரியர் கும்பகோணம் ஆர். திருவேங்கடம் பிள்ளை

மலைக்கு மலை நடுவே முருகையா

மலையாள தேசமப்பா முருகையா

மலையாள தேசம்விட்டு முருகையா

நீ மயிலேறி வரவேணும் முருகையா. படம் : பாலாபிஷேகம் (1977), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர்கள் : கிருஷ்ணமூர்த்தி, டி.கே. கலா, கிருஷ்ணன், இசை : சங்கர் - கணேஷ்

梁 ஆண் : உன் எண்ணத்தை எந்தன்

கன்னத்தில் வந்து எழுதிவிடு.

பெண் : என் பெண்மையைக் காக்கும்