பக்கம்:முருகன் முறையீடு.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 4 திங்கண்ணி முடியான்சேய் தாள்பணியும் முனிசுவாமி தீந்தே னென்ன தங்குயர்பைந் தமிழ்மொழியால் முறையீடொன் றிட்டுவந்தான் தரணி மீதே.


இந்நூலாசிரியரின் ஆப்த நண்பரும்,பிரதம நன்கொடையாளருமான உயர் திருவாளர் ச. இராமநாதய்யர் அவர்கள் எழுதியது.

அன்பார்ந்த நண்ப!

பொற்குடத்திற்குப் பொட்டிடவும் வேண்டுமோ” என்றாற் போல தங்களுடைய நூலுக்கு எனனுடைய இச் சிறுவுரை மிகையென்றே நினைக்கின்றேன். தாங்கள் பக்தி மார்க்கத்தில் நின்று தமிழ் வளர்க்க முற்பட்டதை யுன்னி அகமகிழ்கிறேன். தாங்கள் தமிழ்நாட்டின் பெரியார்களிலொருவராகத் திகழவேண்டும் என்று விழைந்து நிற்கும்,


                                   தங்கள் அன்புள்ள 

ஆண்டார் வீதி எஸ். இராமநாதன் திரிகிரபுரம் 1935