பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1062

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று -கதிர்காமம்) திருப்புகழ் உரை 589 நாதனே! சுடரே! நல்ல குணப் பரிசுத்தனே! (அல்லது ஒலியே! ஒளியே! ஒலி ஒளியே!) நற்குண சிலா! பெண்கள் இருவரை (தேவசேனை - வள்ளியை)ச் சேரும் வேலனே! சோதியே! சிவஞானக் குமரேசனே! குற்றமிலாத கதிர்காமப் பெருமாளே! (மாதர் வசமாயுற்றுழல்வார் . நரகமீதிற் றிகழ்வார்) 429 மார வார முதிரும் நட்பொடு _ (மன்மதனுக்கு உரிமையாகிய அன்பு ಶ್ಗ நட்புடன்), (இலகும் ஆர் அ ஆரம் எற்றி) பிர்காசிக்கின்ற் பொருந்திய அந்த முத்துக்களை எற்றி (iசி), முனியும் கோபிக்கும், ஆரவாரம் உற்ற பேரொலி பொருந்திய கடலாலே (கட்லொலிக்கும்). அழிவு இலாததாய், ஒப்பற்ற கடலின் வடக்குப் பக்கத்தில் எரியும் ஊழித்தியாம் வடவாமுகாக்கினி போல் எரிவதாய், (ஆலம் ஆர்பு இடம்) விடம் நிறைந்து தோன்றிய இடமாம் கடலில் முழுகி (மேலே ஏறி கிரணங்களை வீசும் நிலவாலே (நிலவுக்கும்) ப்கிலில் (புல்லாங்குழலை) இடையர் வாயில் வைத் இனிே ఫ్గఢ్ நேரம் கேட்கச் செய்யும் ఫ్లి யொலிக்கும், தமது ಘೀ விடாது செய்யும் தாய்மாருக்கும், அழியாமல் உண்டாகின்ற காம போகமே நிரம்பி, அளவு கடந்த ஆசை கொண்டுள்ள இந்த அழகிய பெண்ணை நீ அணைக்கவரவேணும். கதிர்காம மகா நகரத்தில் ஒப்பில்லாத வேலாயுதத்தைத் தரித்த க்டவுளே! தோகை யழகு வாய்ந்த மயில் வீரனே! மீன் போன்ற கண்களை உடையவள், கலவைச் சாந்து ಶ್ಗ கொங்கையை உடையவள், (ககனம் - விண்) ண்ணுலகில் வீற்றிருந்தவள் ஆகிய ஒப்பற்றவளாம் தேவ சேன்ையின் மணவாள்னே! (அல்லது க்கனம் - காடு எனக் கொண்டு - வள்ளிமலைத் தினைக்கர்ட்டில் இருந்த ஒப்பற்ற வள்ளியின் மணவாளனே!)