பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 127 சங்கரி மனங்குழைந்து உருக, முத்தம் தர எழுந்தருளும் செழுவிய தளர்ந்த நடைப் பிள்ளையே உலகு தொழும் சரவணப் பெருமாளே! (என்றுநினி தெரிசனைப் படுவேனோ) 48 செம்மணிகளால் ஆகிய அலங்காரம் கொண்டதாய்க் கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவை பூசினதும், புதுமை வாய்ந்ததும் அகன்றதும், நிறைந்ததுமான, அழகிய பொற்குடம் போன்ற கொங்கையிற்பட்டு, ஆசை (மொழியுடன்) குலவுகின்ற மாதர்களின் லீலைகளில் (ஆடல்கள்ல்) திருமஞ்சனம் இதுவே என்று முழுகி அவர்களுடன் மிகவும் உறவாடி (பொழுது) நீட்டித்து அவர்களுடைய அங்கைக்கும் கொங்கைக்கும் இன்பம் பூண்டவனாய்; இருள் நிறைந்த (கருமை நிறைந்த) அழகிய கூந்தலில் உள்ள மாலை, கொஞ்சிக் குலவி உறவுகொள்ளும் வேளையில், ஆபரணங்களுடன் கலைய (அங்ங்ணம்) மாதர்களின் விசத்தே இன்புற்றும் அன்புற்றும் அழிந்து நெடும்போது, இரவும் பகலும் மோகங்கொண்டவனாய் இப்பூமியில் இறவாமல், யானுமுன் இணையடிகளைப் பாடி வாழ என்னுடைய நெஞ்சிற் செஞ்சொற்களைத் தந்தருளு GuГTL//Т95; இளமையையும், மணிகளையும், ஆடலையும் உடைய பாம்புகளை அணிந்த வளைந்த சடையை உடைய ஆதியும், ஒதியுள்ள நான்மறையின் ஆதிப்பொருளும், ஆகிய, சங்கினாலாய தூய குழையினராகிய சிவபிரான், ங்காளிய ருக! மேக வண்ணத்தரும், க்கின்றதும், బ్ధి ன் ੇ துமான . ேே இப் புவி முழுமையும் வாரி அமுதென உண்டு தேவர்களுக்கு அருள் பாலித்த,