பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 349 அறுகம் புல்லை முடித்தவனும், உயிர்களுக்கெல்லாம் ஆதார மானவ்னும், ம்ழும்ான் இவைகளை ஏந்தியவனும், ம்ஹா காளி வெட்கப்படும்படி முன்பு சபையில் (திருவாலங் காட்டில்) நடித்தவனும் ஆகிய சிவபிரானைச் சிறப்புற்ற தந்தையே என்றழைக்க வந்தவனே! பல கலைகளைப் படித்து ஒதும் கவிகளுடைய நாவில் உறைகின்ற இரண்டு திருவடிகளை (அல்லது பெருமை வாய்ந்த திருவடிகளை) உயிடப புலவரேறே! வேலாயுதனே! உயரத்திற் கட்டப்பட்ட பரண்மீதிருந்த குறப்பெண் (வள்ளியின்) தோளைச் சேர்வதற்கு ஆசை கொண்ட மணவாளனே! தாமரை மலர்கின்ற வயலிலும், கமுக மரத்தின் மீதும் வரால் மீன்கள் துயிலும்படி வருகின்ற நீர்ப் பெருக்கை *Р GNT)L— Ш றாகிய் காவேரி சூழ் விளங்கும் பழநியில் எழுந்தருளியுள்ள பச்சைக்கற்பூரம் ஆகிய மணங்கள் கமழும் அலங்கார ஆடம்பரனே! தேவர் பெருமாளே! (மேகார மீதின் மிசை வரவேணும்.) 150 கலக்கம் தரும் வாள் போன்ற விழி வேலோ அல்லது சேல் மீனோ இனிய வாய்ச்சொல் தேனோ பாலோ! கறுத்த நீண்ட கூந்தல் (கரிய) மேகமோ! (இருண்ட) காடோ! பவளமோ வாய் - கழுத்து நீண்ட கழுகோ! தோள் மூங்கிலோ! வயிறான திருமால் பள்ளிகொள்ளும் அழகிய LIITILITI '? ஆலிலையோ! கலவை பூசன கச்சன்னிந்த கொங்கை மேரு மலையோ! யானையின் தந்தமோ இடைதான் நூலோ! மலரில் வீற்றிருக்கும் பிரமன் (இடையை) எழுதினானோ இல்லையோ! வாய் திறந்து பேசுங்கள்! தன்ன மெளனம் சாதிக்கிறீர்களே! மின் போன்ற பெண்மணிகளே பாருங்கள் * என்றெல்லாம் மாதர்களுடைய -