பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை 249. பசியுற்றவருக்கு அன்னமிட தனணத் தனனத் தண்ணத் தனணத் தனணத் தனனத் தனதான அமைவுற் றடையப்பசியுற்றவருக் கமுதைப் பகிர்தற் கிசையாதே. அடையப் பொருள்கைக் கிளமைக் கெண்வைத் - தருள்தப் பிமதத் தயராதே; தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச் சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ். சரிரத் தினைநிற் குமெனக் கருதித் * தளர்வுற்றொழியக் கடவேனோ! இமயத் துமயிற் கொருபக் கமளித் தவருக் கிசையப் புகல்வோனே. tஇரணத் தினிலெற் றுவரைக் கழுகுக் கிரையிட் டிடுவிக் ரமவேலா; #சமயச் சிலுகிட் டவுரைத் தவறித் தவமுற் றவருட் புகநாடும். சடுபத் மமுகக் குகபுக் ககனத் தணியிற் குமரப் பெருமாளே. (1) 'உயிர் நெடுந்துாரம் கொண்டு போகப்படும். " விடாய்ப் படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியும் துயரும் "- கந்- அலங்.56 t இரணம்- யுத்தம். சமயச் சிலுகு மதப் போராட்டம்.