பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புக ழ் உரை 233 புருவம் மேலெழ இருகண்களும் ஒளிவீசி இமைக்க, உபசார வார்த்தைகள் அதிகரிக்க, ஒருவித மயக்கம் தன்வசம் அழிதல் - கவசம்போல (மேற்போர்வை போன்ற அளவான தன்மையில் உண்டாக - அப்போது கணக்கிடுதற்கரிய புதிய உணர்ச்சிகள் தோன்ற - அவ்வுணர்ச்சியை நன்றாக அனுபவிக்க இரு தோள்களும் ஒன்றிக் கலந்து அதிகமான சுகமாகிய அம்சத்தால் (பகுதியால்). புளகாங்கிதம் நிறையக், காமம் என்கின்ற (வாரி) கடல் ததும்பிப் பரவ, அரையில் (இடுப்பிற்) கட்டியுள்ள கயிறும் அரைநானும் (அரை மணியும்) (மழுங்க) ஒளிகுறைந்து விலக, மனத்தோடு மனம் உருகி அன்பு மீக்கொள்ள உயிர்போல மகிழ்ந்து பாவித்துப் பொருள் கிட்டும் வரையில் கலந்து களிக்கும் மாயவித்தை வல்ல பொ மகளிரின் (சிங்கி) விஷச்சூழலை விட்டொழிக்க அருள் புரிவாயாக போற்றப்படுவதாய், மகரமீனும், (முகரமும்) சங்கும் கொண்டுள்ளதாய், சகரரால் உண்டானதாய், (தமரம்) பேரொலி உடையதாய், இருள் நிறத்ததாய், (பிரபல) பேர் போனதாய், வசீகரம் உள்ளதாய், ரத்னம்) மணிகள் கொண்டதாய் உள்ள கடல் # Ho- ன பமி பம் நொடிப்போதில் அளவிட்டு ::அது 鷺 "தி: அமர்ந்த குழந்தையே! பழநிமலை மீதும், சொல்லப்புகின் (இசை இசை) புகழொடு கூடிய ஏரகம் (சுவாமிமலையிலும்), திரு ஆவினன் குடியிலும், சீகாழியிலும், (என்றும் மங்கலமாய் நீ) வாழ்கின்ற திருத்தணிகையிலும், அண்டர்பதிய - (தேவர்களின்) அமராவதியிலும், உறைவிடம் கொண்டவனே! (அல்லது) அண்டர் - (தேவர்கள்) பதிய (உன்னைத் தரிசிக்கவந்து) அத்தலங்களில் தங்குதலைக் கொண்டவனே! முதிய கதியது - முதிய கதியானது - பழம் பொருளாம் வீட்டின்பமானது, நாயேனுக்கும் அடிமைக்கும், உறவாகி நின்று கிட்டும்படியாக நின்று, (அடியேனுடைய ШГТ ШОГТОНТКатШ) аб')[|| || அணிந்து கொள்பவனே! (5) சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி - பாடல் 769. (6) இமையோர் புகுந்திண்டி கந்தமாலை கொடுசேர் காழி சம்பந்தர் 1-24-2.