பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/810

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருத்தாசலம்) திருப்புகழ் உரை 251 (விடத்தார்) விஷகுணம் கொண்ட அசுரர்களுடைய ஊர்கள் வேருடன் அற்றுவிழ (அடித்தாய்) சங்காரம் செய்தாய், ஒளிவேல் கொண்டு ட்ராக்ரிம்ச் செயல்களைப் புரிந்தாய் 蠶 ழ் அமரோர்). தேவர்கள் குடிபுகவும் அவர்களுன்டய றையும் வறுமையும் நீங்கவும். தாமரை போன்ற கண்களை உடைய அழகனே! குறமகள் (வள்ளிக்கும்) பிரியமுள்ள (வண்ணா) அழகனே! என்னுடைய தாய் (விருத்தாம்பினக்) அமர்ந்துள்ள விருத்தாசலத்தில் வாழும் மயில்வாக்ன்ப் பெருமாளே! (நாரிகள் உறவாமோ) 755. முத்தி மொழியாம் பிரணவப் பொருளின் விளக்கப் பொருளைப் பெறச் சிவபிரான் உன்னிடத்த்ே வணங்க, முன்பு (அவருக்கு) ஆப் பொருளை உபதேசித்த (குள்வனே) குளத்தில் உற்பவித்தவனே! (சரவணபவனே) ஒளிமிக்க மதுரையில் சமணர்களின் உயிர் கழுவில் (தெறிபட மறுகிட மறுகிட்டுத் தெறிபட கலக்க முற்றுச் சிதறுண்ண வைத்தவனே! (ஒருவு அரும்) நீக்குதற் கரிதான உன்னுடைய திருவருளில் அன் ல்லாதவர்களைப் போலத் துன்பத்தை அனுப்விக்கின்ற என்னைக் கண்பார் த்தருளாயோ! உலகத்தில் யாவரும் புகழும்படித் திருவண்ணாமலையில் ஒரு நொடிப் பொழுதில் வந்து உதவிய் மயில்வீரனே! கரிய ரேகைகள் பொருந்திப் பொருதற்கு உற்ற அம்புபோன்ற_கண்களை உடைய குறமகள் (வள்ளியின்) கண்க்ளின் எதிரே (வேங்கை) மரமாக முன்பு ஆனவனே! (250-ஆம் பக்கத் தொடர்ச்சி) tt முருகனது அருள் பெறாதவர் துன்பப்படுவர். வெல்லலர் வினை துற அறத்தின் மேவினும் வல்லிதன் கேள்வனை மனத்துன்னார்களே தணிகைப் புராணம் - இராம. (க) XX இது அருணகிரியாரின் வரலாற்றைக் குறிக்கும் பாடல் 331-பக்கம் 330 கீழ்க்குறிப்பு # பார்க்க OO முருகர் வேங்கை மரமானது: - பாடல் 287 - பக்கம் 214 கீழ்க்குறிப்பு O பார்க்க