பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/916

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 357 சுழல்கின்ற என்னுடைய உயிர் மெளனநிலை என்கின்ற 'பரம சுகம்’ ஆகிய பெரிய கடலிற் படிந்து திளைக்காதோ! கவளம் - வாயளவு கொண்ட உணவைக் கொள் துதிக்கையையும், மதம்பாயும் சுவடுகொண்ட لئے/ ILI கன்னத்தையும் உடைய மலையின் (அதாவது யானையின்) முகத்தைக் கொண்ட கடவுளாம் கணபதியின் பின்னர்த் தோன்றிய ஒப்பற்ற மூலப்பொருளே! ஒளியும் கூர்மையும் கொண்ட வேலன்ே! பவளத்தின் (செந்நிறத்தையும்), மரகதத்தின் (பச்சை நிறத்தையும்), கனகம் பொன்னின் (மஞ்சள் நிறுத்தையும்), 繁 (வெண்ணிறத்தையும்) கொன்ட திருக்க்தவத்தையும், கோபுரத்தையும் கொண்டு, சூரியன் தேரின் குதிரைகளும் இடறும்படி உயர்ந்துள்ள மதில்கள் ழ்ந்துள்ள ப/Tஒ)அதி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ப்ரும்ாளே! (உயிர் மவுன பரம் சுக மகோததி படியாத்ோ) 796. (அனல்) நெருப்பு, (அப்பு) நீர், (அரி) காற்று, முதலான பஞ்ச பூதங்கள் சேர்ந்ததும், குணத்ரயம்) சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்கள் வைக்கப்பட்டதும், நிரம்பப்பொய்யானதும் (சற்றும்நிலைத்துநிற்காததும்) ரத்தத்தோடு கூடியதுமான (இந்தக்) குடிசை (உடன்ல) விரும்பி. பயனற்றதும், கவலைகளுக்கு இடம் தருவதும், மனக் குழப்பம் தருவதுமான நூல்களைக்கற்று அந்நூல்களில் உள்ள பொருள்ையும் கொஞ்சம்கூட அறியாமல் (குணகி) கொஞ்சிப்பேசியும், (தனதி) உள்ளம்_களித்தும், நெருப்பில் (பட்ட மெழுகுபோல) உருகியும், குலவி) ந்ெருங்கி உறவாடியும், (கலவி) புன்ர்ச்சிசெயும் (கொடியன்ன) (அல்லது பொல்லாத) பெண்களின் கொடுமையிலும், கடுமையிலும், "குவளை) குவளை மலர்போன்ற கண்ணின் கடைப்பார்வையிலும், குல்ைபட்டு) நிலைகெட்டு நான் அலைச்சல் உறக்கட்வேன்ோ! அந்த அலைச்சல் வேண்டாம் என்றபடி:

  • குவளை - கண்ணுக்கு உவமை - தேனிமிர் குவளைக்கண் திருமகள் அனையாளை" - சிந்தாமணி 2429,

"பசலை யார்ந்தன. குவளை யங்கண்ணே" - குறுந்தொகை 13.